குருநாகல் முதல்வர் உள்ளிட்ட ஏனைய 4 பேரை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு!

AG Obtains Prevention Order Against Kurunegala Mayor Kurunegala Mayor Thushara Sanjeewa Witharana 1
AG Obtains Prevention Order Against Kurunegala Mayor Kurunegala Mayor Thushara Sanjeewa Witharana 1

வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குருநாகல் நகரசபை முதல்வர் உள்ளிட்ட ஏனைய 4 பேரையும் எதிர்வரும் ஓகஸ்ட் 24 ஆம் திகதி வரை கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தம்மை கைதுசெய்யுமாறு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி, குருநாகல் நகர முதல்வர் துஷார சஞ்ஜீவ வித்தாரண மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவை தாக்கல் செய்திருந்த நிலையிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.