சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 6 ஆயிரம் கிலோ மஞ்சள் உடன் நான்கு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது மஞ்சள் கொண்டுவர பயன்படுத்திய படகு ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
சிலாபம் கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த படகு காணப்பட்டதாகவும் பின்னர் அதை சோதனைக்கு உட்படுத்திய போதே குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடலில் வைத்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்வது கடினம் என்பதால் கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகையையும் குறித்த படகையும் மேலதிக விசாரணைகளுக்காக திக்ஓவிட மீன்பிடி துறைமுகத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.