அமைச்சர்கள் பிரிக்கப்பட்ட விதம் குறித்து தாம் திருப்தி அடையவில்லை:ரவூப் ஹக்கீம்!

unnamed 15 1
unnamed 15 1

“கோழிகள், முட்டை மற்றும் கழிப்பறைகளுக்கு இப்போது அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு பெரிய நகைச்சுவை” என நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட நீதி அமைச்சர் அலி சப்ரி இந்த பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் என்று முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் நியமனத்தின்போது அமைச்சர்கள் பிரிக்கப்பட்ட விதம் குறித்து தாம் திருப்தி அடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிதாக நியமிக்கப்பட்ட நீதி அமைச்சர் அலி சப்ரி குறித்த பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.