மருத்துவர் என வேடமிட்டு சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் இருந்து தங்க ஆபரணங்களை திருடிய நபர் ஒருவர் தொடபில் புத்தளம் காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
புத்தளம் மருத்துவமனையில் கண் காது மற்றும் தொண்டை மூக்கு பகுதி தொடர்பில் சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் இவ்வாறு தங்க ஆபரணங்களை திருடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மருத்துவ பரிசோதனையின் போது தங்க ஆபரணங்கள் இருப்பது பரிசோதனைக்கு தடையாக காணப்படுவதாக தெரிவித்து இவ்வாறு திருடி தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.