எனக்கு மட்டுமே அதிகாரம் உண்டு:ரத்ன தேரர்!

Athuraliye.Rathanan.Thero
Athuraliye.Rathanan.Thero

இந்தத் தேர்தலில் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் தொகுதிக்கு ஒரு பிரதிநிதியை நியமிக்க தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக அதுரலிய ரத்ன தேரர் கூறியுள்ளார்.

இதுவேளை தனக்கும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் இடையே எந்த நெருக்கடியும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஞானசார தேரர் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்பவர்கள் இருப்பதை போலவே, தானும் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்பவர்களும் உள்ளனர்.

இதேவேளை பாராளுமன்றத்தில் மிகவும் அறிவுள்ள மூன்று அல்லது நான்கு அரசியல்வாதிகளில் ஒருவரான தாம், சர்வதேச மற்றும் தேசிய அரசியல் குறித்த பரந்த அறிவை கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி குறித்து விவாதிக்க தற்போதைய செயலாளர் வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.