ஐ.தே.கவின் தலைவராக கரு இணக்கம்!

unnamed 19
unnamed 19

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்பதற்குத் தான் தயார் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார் என்று நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியின் பின்னர் கட்சி தலைமைப் பதவியைத் துறப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்தார். இதனையடுத்துத் தலைமைப் பதவிக்காக அக்கட்சிக்குள் கடும் போட்டி நிலவுகின்றது.

இந்தநிலையில், ஐ.தே.கவின் தலைமைப் பதவியை ஏற்குமாறு கரு ஜயசூரியவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பையே அவர் ஏற்றுள்ளார் எனத் தெரியவருகின்றது.