வடக்கு மாகாணத்துக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்போவதில்லை; சரத் வீரசேகர

551d7e6d4932660bf63a788aa8ec3695 L
551d7e6d4932660bf63a788aa8ec3695 L

வடக்கு மாகாணத்துக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்போவதில்லையென இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தனது கடமைகளை பொறுப்பெடுத்துக் கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து கூறிய போது இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்  வட.மாகாணத்துக்கென விசேட பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் பொலிஸ்துறை பிளவுண்டு போகும் எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.