போலியான இரத்தினக்கல் விற்பனை செய்வது தொடர்பான இரு சந்தேக நபர்கள் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவிசாவளை நகரில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. அவிசாவளை காவற்துறைக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் கடந்த காலத்திலும் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.