யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பண்ணைப் பகுதியில், முன்னர் இராணுவ முகாம் இருந்த தனியார் காணியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பண்ணை மீனாட்சி அம்மன் ஆலயம் அருகில் கொட்டகை அமைப்பதற்காக இன்றைய (வெள்ளிக்கிழமை) தினம் நிலத்தை தோண்டிய போதே இந்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.
2006 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த காணியில் இராணுவ முகாம் அமைந்திருந்தது.
மீட்கப்பட்ட மனித எச்சங்களுடன் பெண்கள் அணியும் ஆடைகளும் காணப்படுகின்றன. இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.