கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

5 3

இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 658 ஆக அதிகரித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இதுவரை தொற்று கண்டறியப்பட்ட இரண்டாயிரத்து 882 பேரில் இன்னும் 213 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.