ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக வர்த்தமானி வெளியானது..!

gazzete

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானியில் ரஞ்சித் மத்துமபண்டா, திஸ்ஸ அத்தநாயக்க, இம்தியாஸ் பாகிர் மாகர், இரான் விக்ரமசிங்க, ஹரின் பெர்ணான்டோ, மயந்த திஸாநாயக்க மற்றும் டயனா கமகே ஆகியோரே தேசிய பட்டியல்  ஊடாக நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆவர்.

மேலும், தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பேராசிரியர் ஹரினி அமரசூரியகே தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.