வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 309 பேர் தாயகம் வந்தடைந்தனர்

srilankan airlines

கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 309 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.

லெபனான் பெய்ரூட் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 1506 எனும் விமானத்தின் ஊடாக 245 இலங்கையர்கள், இன்று (சனிக்கிழமை) காலை 7.30 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த Etihad விமான சேவைக்கு சொந்தமானEY 264எனும் விமானத்தின் ஊடாக  40 இலங்கையர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.35 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அதேபோன்று கட்டார்- தோஹா நகரில் இருந்து பயணித்த இரண்டு விமானங்கள் ஊடாக 11 இலங்கையர்களும் இந்தியாவின் மும்பை நகரில் இருந்து பயணித்த ஶ்ரீலங்கன் விமானசேவைக்கு சொந்தமான யு. எல் 1042 எனும் விமானம் ஊடாக  13 இலங்கையர்களும் நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.