முள்ளிவாய்க்காலில் படையெடுத்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் !

IMG 4742

தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து பாராளுமன்றுக்கு தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற அரசியல்  பயணம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மண்ணிலிருந்து இன்றையதினம் (சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ள, நிலையில் தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட முன்னணியின்  அரசியல் தலைவர்கள்  என தற்போது ஒன்றுகூடியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வருகை தந்த மக்கள் கூட்டத்தை விட அதிகளவான மக்கள் பிற பிரதேசங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது .