பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் 11ஆம் திகதி முற்பகல் 11.30 மணிக்கு விசேடமாக பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று பிற்பகல் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் குறித்த குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய அன்றைய தினம் ‘விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளைத் தடுத்தல்’ சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், தேசிய புத்தாக்க முகவராண்மைச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்வதற்கும் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நவம்பர் மாதம் 11ஆம் திகதி இடம்பெறும் அமர்வின் பின்னர் எதிர்வரும் டிசம்பர் 03ஆம் திகதியே பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.