புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் இராணுவ சாசனம் வெளியிட்டு வைக்கும் நிகழ்வு நேற்று (Nov.07) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்த சாசனத்தில் கையொப்பமிட்ட சஜித் பிரேமதாச அதன் பிரதிகளை இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பகிர்ந்தளித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ருவன் விஜேவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா, லக்ஸ்மன் செனவிரத்ன ஆகியோரும், இராணுவம் மற்றும் பொலிஸ் என்பவற்றின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.