சமையல் எரிவாயுவை மறைத்து வைத்திருத்தல் குற்றம்!!

Gas Cylinder
Gas Cylinder

சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களை சோதனையிட்டு எரிவாயுவை மறைத்து வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந் நடவடிக்கைக்காக 500 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் போதுமான எரிவாயு சிலின்டர்கள் தற்சமயம் நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சமையல் எரி வாயுவை கூடுதலான விலைக்கு விற்பனை செய்கின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் எதிர்வரும் வியாழக்கிழமை வரை எவ்வித இடையூறுகளும் இல்லாம் சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.