மணல் அகழ்விற்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

protest
protest

வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள கண்டனப் போராட்டமொன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கண்டனப் போராட்டம் நாளை முற்பகல் பத்து மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

புதிதாகப் பதவியேற்றுள்ள ஐனாதிபதி கோத்தபாய ராஐபக்ச மணல் வழித்தட அனுமதியை இரத்துச் செய்துள்ளதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் சட்டவிரோத மணல் அகழ்வுகள் அதிகரித்திருக்கின்றன.

இதனால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாக பல தரப்பினர்களும் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருவதுடன் இதனைக் கட்டப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உரிய நடவடிக்கைளை எடுக்க வலியுறுத்தியும் பல தரப்புக்கள் இணைந்து போராட்டமொன்றை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளன.

இதற்கமைய நாளை யாழ் மத்திய பேருந்த நிலையத்தில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் கட்சி வேறுபாடகளைக் கடந்து அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.