13 ஆம் திருத்த சட்டம் தொடர்பில் சி .வி .கே சிவஞானம் புதிய கருத்து

45
45

தமிழ் மக்களின் அபிலாசைகளை சிதைக்கும் வகையிலான பலவகையான திட்டங்கள் தீர்மானங்கள் இலங்கை அரசால் அவ்வப்போது கொண்டு வரப்படுகிறது .

அந்த வகையில் கொண்டு வரப்பட்ட 13 ஆம் திருத்த சட்டம் தொடர்பில் பல இழுபறிகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன.

இது தொடர்பில் வடக்கு மாகாண அவை தலைவர் சி .வி .கே சிவஞானம் அவர்கள் தமிழ்க்குரல் செய்தி சேவைக்கு வழங்கிய பிரதியக செவ்வியில் 13 ஆம் திருத்தம் என்பது இந்த நாட்டின் அரசியல் அமைப்பின் அம்சம் அதனால் அதனை நீக்க முடியாது .

அதில் சில பல விடயங்களை நீக்க வேண்டும் என்றே கோட்டப்பாயா கூறுகிறார் .

அதில் உள்ள முக்கிய விடயங்களை மறந்து பேசுவது தவறானது என குறிப்பிட்டுள்ளார் .


13 ஆம் திருத்தம் தொடர்பில் பலவாறான கருத்துக்கள் பகிரப்படும் வேளையில் அவை சரியானதே என்பதுபோல் வடக்கு மாகாண அவை தலைவர் சி .வி .கே சிவஞானம் கருத்து வெளியிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.