நாடாளுமன்ற உறுப்பினருடன் இந்திய தூதுவர் நேரடியாக சந்திப்பு

FB IMG 1578934975599
FB IMG 1578934975599

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் இந்திய துணைத்தூதுவர் எம்.கிருஸ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (13) மாலை மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது .

குறித்த சந்திப்பு சிநேக பூர்வமாக இடம் பெற்றதுடன் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாகவும், இவ்வருடம் நடை பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தொடர்பாகவும் தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டு அறிந்து கொண்டார்.