மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மூன்று பிள்ளைகளின் தந்தையான பி.சீ.பியரத்தின (வய- 45) என்பவரும், மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய எஸ்.ரத்னாயக்க (வயது-28) என்ற பொலிஸ் அதிகாரி நேற்று திங்கட்கிழமை (13) உயிரிழந்தார்.
இதே வேளை மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற மேலும் 4 பொலிஸ் அதிகாரிகள் காய்ச்சல் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
இவர்களும் டெங்கு நோய்க்கு உள்ளாகியுள்ளனரா என பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.