சுதந்திர தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று(04) காலை 8 மணிக்கு சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ச. கனகரத்தினம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றியதுடன் மரநடுகை நிகழ்விலும் ஈடுபட்டார்.
குறித்த நிகழ்வில் அரசாங்க அதிபர், கணக்காளர், மாவட்டச் செயலக திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.