இராணுவத் தளபதி தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு

www
www

காணிகள் விடுவிக்கப்பட்டும் மீளக் குடியமர்வதில் மக்கள் ஆர்வம் இல்லை என இராணுவத் தளபதி தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது .

வலிகாமம் வடக்கு மீளகுடியேற்ற குழுவின் பிரதிநிநிகள் பொது மக்களின் அனைத்துக் காணிகளையும் விடுவித்து மீள்குடியமர்வதறகான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்றும் கோரியுள்ளனர்.

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் குழு யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.