கல்முனை மாநகர சபைக்கு புதிய பிரதி மேயர்

1 ting
1 ting

கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் தெரிவு செய்யப்பட்டார்.

கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி எம்.எ.றக்கீப் தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட அமர்வின்போதே இவர் தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த புதிய பிரதி மேயர் தெரிவில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் வழிமொழிந்ததுடன் அதே கட்சியைச் சேர்ந்த ஏ.எம்.றோசன் அக்தர் வழிமொழிந்த நிலையில் சபையில் சமூகமளித்திருந்த அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய பிரதி முதல்வராகத் தெரிவானார்.

முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ் (தமிழர் விடுதலை கூட்டணி) கட்சித் தலைவரினால் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதனைத் தொடர்ந்து எழுந்த வெற்றிடத்திற்குப் புதிய பிரதி முதல்வராக ரஹ்மத் மன்சூர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.