அனைவருக்கும் இரண்டாம் கட்ட சமுர்த்தி நிதி வழங்கப்படும்

20200522 102402 mfnr scaled
20200522 102402 mfnr scaled

யாழ்மாவட்டத்தில் முதலாம் கட்ட 5000 ரூபாய் உதவி பணத்தினை பெற்ற அனைவருக்கும் இரண்டாம் கட்ட சமுர்த்தி நிதி வழங்கப்படும் எனவும், பொதுமக்கள் இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் க.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக அரசினால் வழங்கப்படும் இடர் நிதியினை யாழ்ப்பாண மாவட்டத்தில் வதியும், ஏப்ரல் மாத உதவித் தொகையினை பெற்ற 135,113 குடும்பங்களுக்கு இரண்டாம்கட்டமாக 5,000 ரூபா உதவித் தொகை கட்டாயமாக வழங்கப்படும் எனவும் இவ் உதவித்தொகை 76,032 சமுர்த்தி பயனாளிகள், 11,000சமுர்த்தி உதவி பெற காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள், 39,473 தொழிலற்றவர்கள் மற்றும் 8,608 மேன்முறையீடுகள் மூலம் இணைக்கப்பட்டோர் உள்ள குடும்பத்தினர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முதற்கட்டமாக உதவித்தொகை பெற்ற அனைவருக்கும் இரண்டாம் கட்ட உதவித் தொகை கடந்த 18 ஆம் திகதி தொடக்கம் வழங்கப்பட்டு வருகின்றது.

இரண்டாம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு கட்டாயம் வழங்கப்படும் எனவே இது தொடர்பில் பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை. அரசினால் வழங்கப்படும் நிதி வழங்கலில் உள்ள தாமதத்தின் காரணமாக மக்களிற்கு குறித்த உதவித்தொகையினை வழங்குவதில் தாமதம் ஏற்படுகின்றது எனினும் அது கிராமமாக அனைவருக்கும் வழங்கப்படும்.

தங்களுடைய பிரதேச சமுத்தி உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பொது மக்கள் இரண்டாம் கட்ட கொடுப்பனவை பெற்றுகொள்ள முடியும் என பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.