மன்னார் – கட்டுக்கரை குளத்தின் நீர் திறந்து விடப்பட்டது

6
6

மன்னார்- கட்டுக்கரை குளத்தின் கீழான சிறு போக நெற் செய்கைக்கான நீர் வினியோகம் நேற்று புதன்கிழமை காலை வைபவ ரீதியாக சமையத் தலைவர்களின் ஆசியோடு 11 ஆம் கட்டை வாய்க்கால் துருசில் சம்பிரதாய முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர் நடராசா யோகராசா தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

நீர்ப்பாசன பொறியியலாளர்கள்,சமயத் தலைவர்கள்,கட்டுக்கரைக் குளத்தின் வாய்கால் அமைப்பு பிரதிநிதிகள்,விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,திணைக்கள அதிகாரிகள் , விவசாய அமைப்பக்களின் பெண் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.