நானாட்டான் பிரதேச செயலகமும் நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் இணைந்து நாளை வெள்ளிக்கிழமை காலை இரத்ததான முகம் ஒன்றை நடாத்த உள்ளதாக நானாட்டான் பிரதேசச் செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் தெரிவித்தார்.
நூறு பேரை இணைத்து நாளை வெள்ளிக்கிழமை காலை நானாட்டான் பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம் இடம் பெற உள்ளது.
குறித்த இரத்ததான முகாமில் இளைஞர்கள்,யுவதிகள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்க முடியும்.
குறிப்பாக கிராம அலுவலகர்கள்,பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
நானாட்டான் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அனுசரணையில் குறித்த இரத்ததான முகாம் இடம் பெற உள்ளது என நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் மேலும் தெரிவித்தார்.