ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

unnamed
unnamed

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பால்பண்ணை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் அதே இடத்தைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயது உடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 80 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.