தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளர்கள் கலந்துரையாடல்

3 n
3 n

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடவுள்ள மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் (06) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிப் பணிமனையில் வேட்பாளரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராசசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், பொறியியலாளர் மு.ஞானப்பிரகாசம், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன், சட்டத்தரணி ந.கமல்தாஸ் என வேட்பாளர்கள் எண்மரும் கலந்து கொண்டனர்.

இதன்போது தேர்தலுக்காக மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.