எங்களுக்கு நீலன்களும் சுமந்திரன்களும் தேவை இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாம் நிறைய புத்திசாலிகளையும் அறிவாளிகளையும் கடந்த காலத்தில் இழந்துள்ளதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
சந்திரிக்கா அரசாங்கத்துடன் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான யோசனையை தயாரிக்கின்றபோது, சட்டப் புலமை கொண்ட நீலன் இருந்திருந்தால், இதில் விண்ணன் என்றும் அவர் இதனை எழுதியிருப்பார் என்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தளபதிகளுக்கு சொன்னதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.