“வடக்கில் சில இடங்களில் வெடிபொருள்கள் அண்மையில் வெடித்துள்ளன. சில இடங்களிலிருந்து வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சந்தேகத்தில் கைதுகள் இடம்பெற்றுள்ளன. எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்ற விவரத்தை இப்போது கூற முடியாது.”
- இவ்வாறு பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்கள் வழங்கும் தகவல்களுக்கு அமைவாக மேலும் சிலர் கைது செய்யப்படுகின்றனர். இவர்களில் பலர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்களா என்பதை விசாரணைகளின் பின்னரே கூற முடியும். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரும், பொலிஸாரும் இணைந்து இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்” – என்று கூறியுள்ளார்.