வடபகுதி மக்களின் முதல் தெரிவு டக்ளஸ் போன்ற தலைவர்களாக இருக்க வேண்டும் – மஹிந்த

Untitled 1 1

வடபகுதி மக்கள் தமக்கு நிரந்தரமான அரசியல் தீர்வினை காணவும் தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவும் கூடிய ஒரு தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்ற மக்கள் சேவை செய்யும் தலைவர்களை உங்களது முதல் தெரிவாக தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி அவருக்கு மேலும் பலத்தை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று தெரிவித்தார்.

அலரிமாளிகையில் தமிழ்ஊடகங்களின் பிரதானிகளை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெறுமனே பாராளுமன்ற ஆசனங்களை நிரப்பிக்கொண்டு தேவையற்ற விடயங்களை பேசி இந்நாட்டின் உயர் சபையான பாராளுமன்றத்தில் தேவையற்ற முறையில் கூக்குரல் இடுவதால் எந்தவிதமான பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்று அவரது கட்சியில் பல சிறந்த வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

அதேபோன்று இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் அரசாங்க கொள்கைகள் சார்பு கட்சிகளில் சிலரும் போட்டியிடுகிறார்கள்.

அவர்களைத் தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி வடபகுதி மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.