தரக்குறைவான வார்த்தை பிரயோகம் செய்த நபரை தாக்கிய பெண்!

vikatan 2019 09 4e1139a7 974c 4a50 963c b47bff048e7d 52
vikatan 2019 09 4e1139a7 974c 4a50 963c b47bff048e7d 52

யாழ் பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (06) பிற்பகல் (02.15) மணியளவில் நடமாடித்திரிந்து அதிஸ்ரலாப சீட்டு விற்பனை செய்யும் நபர் ஒருவர் அங்கு வந்த இளம் பெண் ஒருவரிடம் ரோட் எவ்வளவு என்று கேட்டுள்ளார்.


தரக்குறைவான வார்த்தை பிரயோகம் செய்த அந்த நபரை முறைத்துப் பார்த்த அந்த பெண் விடயத்தை பெரிது படுத்தாமல் அங்கிருந்து சென்றுள்ளார்.

அங்குள்ள வியாபார நிலையம் ஒன்றில் பெருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் அவ்வழியாக வந்த அந்த பெண்ணை கண்ட குறித்த நபர் மீண்டும் ரேட் எவ்வளவு என்று கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் தன்னிடம் தரக்குறைவாக பேசியவரை தாக்கியுள்ளார்.

தாக்கியது மட்டும் அல்லாமல் அந்த பெண் குறித்த நபரை பொலிஸ் நிலையம் வருமாறு கோரி அழைத்துச் சென்றுள்ளார்.
இதன் போது அந்த நபர் பெண்ணின் காலில் விழுந்து தன்னை மன்னித்துவிடுமாறு கதறியதை அடுத்து அவரை பிழைத்து போகுமாறு சொல்லிய அந்த பெண் இனி இவ்வாறு பெண்களிடம் தரக்குறைவாக நடந்தால் நிலமை மோசமாகும் என்றும் எச்சரித்துச் சென்றுள்ளார்.