எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிற்கான தபால்மூல வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் ஆரம்பமாகி தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் வவுனியா சுகாதார ஊழியர்கள் தமது அஞ்சல் வாக்குகளை வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் அளித்துள்ளனர்.
வாக்களிப்பு நடவடிக்கைகள் சுகாதார நடைமுறைகளை பேணியவாறு சமூக இடைவெளியை பின்பற்றி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை குறித்த வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.