காட்டு யானை தாக்கி பெண் விரிவுரையாளர் மரணம்!

download 4 13
download 4 13

யாழ். பல்கலையின் கிளிநொச்சி வளாகத்தின் பெண் விரிவுரையாளர் யானை தாக்கிய படுகாயமடைந்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

கொழும்பு களனி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய காயத்ரி டில்ருக்க்ஷி எனும் விரிவுரையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த குறித்த பல்கலைக்கழக விரிவுரையாளரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் காட்டு யானை தாக்கி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார் நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.