அனுருத்த சம்பாயோ விளக்கமறியலில்

aa
aa

கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜீ.குணதாச முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை நாளை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 11 நாட்களின் பின்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி, காவல்துறை விசாரணை குழுவில் நேற்று சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் அவரிடம் இன்று மதியம் வரை வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதிகளுக்கு சலுகைகளை ஏற்படுத்தி கொடுத்தமை தொடர்பில் நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட 4 அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கமைய அவர்களை கைது செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றால் கடந்த 22 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.