அனைத்து வாக்களிப்பு நிலையங்களும் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவாத இடங்கள் என நூற்றுக்கு நூறு வீதம் உறுதி செய்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்று (03) இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வாக்காளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வாக்களிக்க வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருமுறை கைகளை நன்றாக கழுவ வேண்டும் எனவும் வாக்கெடுப்பு நிலையத்தில் இருந்து வெளியேரும் போதும் கைகளை கழுவ வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேனா ஒன்று எடுத்து வர வேண்டும் எனவும் அவ்வாறு எடுத்து வராதவர்களுக்கு கிருமி தொற்று நீக்கப்பட்ட பேனா வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.