மட்டக்களப்பு மாவட்டத்தில் மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்ற மூன்று நபர்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் நவம்பர் 15ம் திகதி இயந்திரபடகு மூலமாக மாந்தீவிற்கு வாக்கு சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்டு வழமையான நேரத்திற்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டு மாலை 05 மணிக்கு வாக்கெடுப்பு நிறைவுபெறுமென தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் வாக்காளர் குறைந்த வாக்கெடுப்பு நிலையமாக இவ் வாக்களிப்பு நிலையம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.