தேர்தலை பகிஸ்கரிக்க துண்டுப்பிரசுரம்!

election 2
election 2

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரினால் வடமாகாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் 16ம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளநிலையில் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கோரி வடமாகாணத்தில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.