13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா நேற்று முன்தினம் (Dec.01) காத்மண்டுவில் உள்ள தசரத் ரங்கசாலா விளையாட்டரங்கில் கோலாகலமாக ஆரம்பமாகியது.
தெற்காசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான நேற்று (Dec.02) கராத்தே, டய்க்வொண்டோ, பெட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன.
ஆண்களுக்கான தனிநபர் கராத்தேயில் பங்குகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.
குறித்த போட்டியில் நேபாளத்தைச் சேர்ந்த கஜி ஸ்ரேஸ்தா தங்கப் பதக்கத்தையும், பாகிஸ்தானைச் சேர்ந்த நியாமதுல்லாஹ் வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தார்.
இதன்மூலம் தெற்காசிய விளையாட்டு விழாவில் முதல் பதக்கத்தை வென்ற தமிழ் பேசுகின்ற வீரராக இடம்பிடித்துள்ளார்.