அம்பாறையில் இராணுவத்தினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனுக்குமிடையே இன்று பிற்பகல் தம்பிலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள மக்களை சந்திக்க சென்ற வேளை சோதனைச்சாவடியில் நின்ற இராணுவத்தினர் நாடாளுமன்ற உறுப்பினரது வாகனத்தை சூழ்ந்து தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இவ்வாறான அராஜக போக்கினை காட்டுகின்றனர் என்றால் சாமானி மக்களுக்கு எவ்வாறான நெருக்கடியினை கொடுக்கும் என்பதனை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும்.
பிரதான வீதியில் வாகனத்தை நிறுத்தி அவமதிக்கும் நோக்கோடு வாகனத்திலிருந்து இறங்குமாறு சத்தமிட்டனர். இதனை தொடர்ந்து வாகனத்தை சோதனையிட்டபோது முறுகல் ஏற்பட்டது.
நாளைய பேரணிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பதாகைகள் துணிகள் ஏதும் உள்ளதா என்றும் திருக்கோவில் பிரதேத்திற்கு செல்லமுடியாது என இராணுவத்தினர் கூறியவேளை முறுகல் நிலை தோன்றியது என தெரிவித்தார்.