மக்கள் வெள்ளத்துடன் பொலிகண்டியை வந்தடைந்த நீதிக்கான பேரணி!

IMG 20210207 184318
IMG 20210207 184318

பொலிகண்டியை வந்தடைந்தது நீதிக்கான பேரணி அலைகடல் என திரண்டு மக்கள் வெள்ளத்தில் நிறைந்தது .

வாழ விடு வாழ விடு தமிழினத்தை ,அழிக்காதே அழிக்காதே வாழ்விடங்களை அழிக்காதே என்ற வாசகங்கள் விண்ணதிர சிங்களத்தின் செவிப்பறை கிழிய பேரணி இன்று மாலை வந்தடைந்தது.

பொத்துவிலில் கடந்த 3 ம் திகதி கொட்டும் மழையில் பல விஷேட அதிரடி படையினர்,காவல்துறையினரின் பல்வேறுபட்ட தடைகளை உடைத்து , அரசியல் சமூக ஆர்வலர்களின் நீதிமன்ற தடையுத்தரவுகள் வழங்கப்பட்டு மக்கள் உணர்வெழுச்சி பாரிய போராட்டமாக வடகிழக்கு தாயகங்களில் உணர்வோடு அனைவரும் தங்களை ஈடுபடுத்தினர்.

அம்பாறை பொத்துவிலில் ஆரம்பித்த நீதிக்கான பேரணி மட்டக்களப்பு,திருமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஊடாக யாழ் பொலிகண்டி இன்று 7 ம் திகதி முற்றத்தை வந்தடைந்தது.

தமிழர்களுக்கு அநீதி இழைத்து சிங்களத்திற்கும் , தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், உள்ளிட்ட தமிழருக்கு இந்த தேசத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கும் சர்வதேச விசாரணையை வலியுறுத்திய போராட்டம் உலகை சற்று இலங்கை தீவை உற்று பார்க்க வைத்துள்ளது.