வீரர்களின் உயிர்களுடன் விளையாடுவதாக குற்றச்சாட்டு

mahela
mahela

இலங்கை கிரிக்கெட், வீரர்களின் உயிர்களுடன் விளையாடுகின்றதாக என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இன்று ஆரம்பமாகவுள்ள உள்ளூர் ஒருநாள் போட்டி தொடரிற்கான கால அட்டவணை தொடர்பில் தனது அதிருப்தியினை தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமாகவுள்ள போட்டி தொடர்ச்சியாக இடைவெளியின்றி 31ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இவ்வாறு போட்டிகளை நடத்துவதன் மூலம் வீரர்களின் தரத்தை உயர்த்த முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாறாக இவ்வாறு இடையறாது போட்டிகளை நடத்தினால் இறுதியில் வீரர்கள் உயிருடன் இருப்பார்களா என்ற சந்தேகம் எழுகின்றது எனவும் மஹேல ஜயவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.