இன்றைய தினம் இதுவரையில் 3,441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

b22212ed images 1
b22212ed images 1

இலங்கையில் மேலும் 661 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்றைய தினம் இதுவரையில் 3,441 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 154,784 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.