நாடு தொடர்பில் சிந்திப்பவர்களையே மக்கள் எதிர்பார்த்துள்ளனர் – ரணில்

1540963163 6933965 hirunews ranil
1540963163 6933965 hirunews ranil

அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியினையும் மக்கள் நிராகரித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் 75 ஆவது ஆண்டு பூர்த்தி தின நிகழ்வுகள் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் டிஜிட்டல் தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.

இந்தநிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையை முன்னேற்ற பாதையில் இட்டு செல்வதற்கு புதிய வேலைத்திட்டங்களை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கவுள்ளது. 2020 நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சி பாரிய பின்னடைவை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோல்வி ஏற்பட்டதற்கான காரணிகள் தொடர்பில் ஆராய்ந்ததில் பல்வேறு புதிய விடயங்கள் தோன்றியுள்ளன.

தற்போதைய அரசியல் முறை, தற்போதைய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியினை மக்கள் நிராகரித்துள்ளனர்.

நாடு தொடர்பில் சிந்தித்து செயலாற்றக்கூடியவர்களையே பொதுமக்கள் எதிர்ப்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.