மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அரசாங்கம் அனுப்பிய கடிதம் உண்மைக்கு புறம்பானது – சி.வி. விக்னேஸ்வரன்

vikki
vikki

அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு, அண்மையில் அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையில், உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உண்மையான நிலைமைகள் குறித்த தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்றை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகருக்கு, நேற்று அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போரின் இறுதி நாளில் 14 ஆயிரம் பேர் மாத்திரமே இறந்தார்கள் என்பது உள்ளிட்ட உண்மைக்கு புறம்பான பல கருத்துகள் அரசாங்கத்தின் அறிக்கையில் உள்ளடங்கி இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.