ஐ.நா அறிக்கை இம்முறை கடுமையானதாக இருக்கும் – கஜேந்திரகுமார்

kajenthirakumar
kajenthirakumar

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இந்த முறை கடுமையானதாக இருக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருடனான நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய கட்சிகளின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பிலும் அவருக்கு விளக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.