ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரின் பாரியார் ஆகியோர் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன், கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் இருந்து மாலைதீவுக்கு சென்றமையை இலங்கை வான்படை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்காக இன்று அதிகாலை வான்படையின் வானூர்தி ஒன்றை தாம் வழங்கியமையை இலங்கை வான்படை உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் முழு ஒப்புதலுக்கு உட்பட்டு குடியேற்றம். சுங்கம் மற்றும் பிற சட்டங்களுக்கு உட்பட்டு இந்த வானூர்தி வழங்கப்பட்டதாக வான்படை தெரிவித்துள்ளது.