புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்!

Parliment in one site 800x534 1
Parliment in one site 800x534 1

இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் ஆரம்பமாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி தெரிவுக்காக போட்டியிடுகின்றனர்.

இந்த மூவரில் ரணில் மற்றும் அழகப்பெரும ஆகியோருக்கு வாக்களிக்கவுள்ளதாக பல கட்சிகளும் நேற்று முதல் இன்று வரை தமது நிலைப்பாட்டை வெளியிட்டு வந்தன.

இந்தநிலையில் தற்போது வாக்கெடுப்பு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இதேவேளை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்னதாக காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டகோகம’ மற்றும்  நாடாளுமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் ஆயுதம் ஏந்திய மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.