இலங்கையின் விளையாட்டுத்துறையில் இடம்பெறுகின்ற குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஒன்று எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சில் நேற்று (Oct.18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.