தேசிய விளையாட்டு விழா இன்று ஆரம்பம்

sports festival
sports festival

45 ஆவது தடவையாக நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழா இன்று (24) பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில்
ஆரம்பமாகவுள்ளது.

விளையாட்டு துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும் இவ்விழாவில் நான்கு நாட்கள் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறும் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்குகொள்ளவுள்ளனர்.

இன்று ஆரம்பமாகும் போட்டிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

போட்டிகள் பல கட்டங்களாக நடைபெறவுள்ளன.
சில குழு போட்டிகள் பல நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

தேசிய விளையாட்டு விழாவில் சாதனைகளை நிலைநாட்டும் வீர, வீராங்கனைகளுக்கு பணப்பரிசில்களும் வழங்கப்படுமென விளையாட்டு துறை பணிப்பாளர் நாயகம் தம்மிக்க முதுகல தெரிவித்துள்ளார்.